பூரியார் கண்ணும் உள.
கலைஞர் உரை:
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
மு.வ உரை:பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில்
மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
சாமமன் பாப்பையா உரை:
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம்
இழிந்த மனிதரிடமும் உண்டு.
பரிமேலழகர் உரை:
(அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய
கருணை. இல்லறத்திற்கு அன்புடைமை போல இது துறவறத்திற்குச் சிறந்தமையின்
முன் கூறப்பட்டது.)
செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்து
தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளால் வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார்
கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும் செல்வங்கள் இழிந்தார் கண்ணும்
உளவாம் ஆகலான். (அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான்
மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய
செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம் பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).
மணக்குடவர் உரை:
செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்;
பொருட்செல்வமானது கீழாயினோர் மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக