சனி, 20 அக்டோபர், 2012

படைகுடி கூழ்மைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

கலைஞர் உரை:
       ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு. முறிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புக்க்களும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

மு.வ உரை:
     படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையனவே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.

சாலமன் பாப்பையா உரை:
     வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்க முடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக